Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதிப்பு 300 ஐ தாண்டியது

மே 04, 2020 08:58

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், கூலி தொழிலாளளர்கள், வெளிமார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு கொரோனா பரவி வருகிறது. அவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

தற்போது வரை கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் 129 பேரும், சென்னையில் 69 பேரும், விழுப்புரத்தில் 76 பேரும், அரியலூரில் 42 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூரில் தலா ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கோயம்பேடு சந்தையை மூட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்